Wednesday, June 10, 2015

தென்றல்

தமிழ் வலை கவிஞர் சசிகலா அவர்கள் நேற்று எழுதிய தென்றல் வலைப்பதிவு பாடல் பிரமிக்க வைக்கும் படைப்பு ஆகும்.


அதைப்படிக்கும்பொழுதே பாடினேன் என்று சொல்வேன். எந்த இடத்திலும் எந்த தடங்கலும் வராது , முதல் வரிக்கு எந்த சந்தம் பொருத்தமானதோ அதுவே இறுதி வரை திடமாக இருந்தது.

சந்தத்துக்கு கட்டுப்பட்டு அதே சமயம் இனிமையாகவும் தெளிவாகவும், எளிதாகவும் எல்லோருக்கும் எளிதாய் புரியும்படியாகவும் இருப்பது சசிகலா அவர்களின் கவிதைகளே.

அதை படித்து, அதற்கு பின்னூட்ட பாராட்டு ஒன்றை கவிதை வடிவிலே இயற்றி பிரான்ஸ் நாட்டு கவிஞர் பாரதிதாசன் அனுப்பி இருக்கிறார். அதையும் நான் அதே ராகத்தில் பாடி மகிழ்ந்தேன்.

நான் பாடகன் அல்ல. ஒரு வாசகனே.எனக்கே தெரியும்.

இருப்பினும்
கவிதை என்றால் அதை படிக்கும் ஒவ்வொருவனையும்
பாடிடத் தூண்டுவதே ஒரு புலவனின் திறமை.

படிக்கும் எந்த வாசகனும் தத்தம் சூழ்நிலை மறந்து அந்தக் கவிதையிலேயே உள்ளம் நெகிழ்ந்து போவானாயின் அது தான் அவன் புலமை.

துவக்கத்தில் மரபு சாரா கவிதைகளை உருவாக்கிக் கொண்டு மகிழ்வித்த இவர், பிரான்ஸ் நாட்டு புலவர் பாரதி தாசன் அவர்களை தமது ஆசான் ஆகக்கொண்டுள்ளது இவரை
புதிய இலக்குடன், புதிய வேகத்துடன்
கவிதைகளைப் புனையத் தூண்டியுள்ளது  சொல்லலாம் . மிகையல்ல.



இது தமிழுக்கு இவர் சேர்க்கும் பெருமை.
இவரை வாழ்த்தி மகிழ்வது நமது கடமை.
********************************
*********************\

இன்று அமேரிக்காவில் இருக்கும் கவிதாயினி கவிநயா அவர்களின் செய்தி இதோ:

அன்பினிய தாத்தா,
அன்பான இனிய 74-வது பிறந்த நாள் வாழ்த்துகள் தாத்தா! இன்னும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக சந்தோஷமாக இருந்து எல்லாருடைய பாடல்களுக்கும் மெட்டமைத்துத் தர அன்னை அருளட்டும்.
பாடல் அருமையாக இருக்கிறது, இடுகையில் சேர்த்து விட்டேன் தாத்தா. அன்பான ஆசிகளுக்கும் மிக மிக நன்றி.
அன்புடன்
கவிநயா

2006  ம் ஆண்டு முதல் இது நாள் வரையில்
 ஒவ்வொரு செவ்வாய் கிழமை அன்றும் 
அம்மனைப் போற்றி கவிதை எழுதி
 அதைத் தனது வலை 
www.ammanpaattu.blogspot.com
இல்
இட்டு வருகிறார்கள். இது வரை ஒரு வாரம் கூட இந்த 186 ஆண்டுகளில் தவறியது இல்லை.நானே ஆயிரத்துக்கு மேலான இவரது பாடல்களுக்கு இசை அமைத்து இருக்கிறேன். 

அன்னையைப் போற்றுவது, அவள் அடிகளைத் துதித்து அவள் சரண்  அடைவதையே ஒரே நோக்கு, இலக்கு ஆகக்கொண்ட  இவரது ஆன்மீக வலை 
அம்மன் பாட்டு ஆகும்.


நேற்று அவர் வலையில் எழுதிய பாடல் இதோ: 
விடையேறி வர வேண்டும்
சிவனோடு வர வேண்டும்

உடம்போடு உயிர் உறவு

அறும் முன்னே வர வேண்டும்!


உள்ளத்தில் வர வேண்டும்

உன்நினைவைத் தர வேண்டும்

ஊனுருக உன் புகழைத்

தினம் பாடும் வரம் வேண்டும்!


கரும்பினிய என் தேவி

காப்பாற்ற வர வேண்டும்

கறுத்திட்ட கண்டனுடன்

கடிதேகி வர வேண்டும்!


குருவாகி வர வேண்டும்

குறை தீர்க்க வர வேண்டும்

மறை போற்றும் மாதவியே

மறு(ற)க்காமல் வர வேண்டும்!
--கவிநயா 

 இந்த சுப்பு தாத்தாவை ஒரு பொருட்டாக மதித்து அவருடைய கருத்துகளுக்கு, பின்னூட்டங்களுக்கு தத்தம் வழிகளிலே இடம் தரும் 
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் 
எங்களது ஆசிகள்.


birthday wishes from google.

3 comments:

  1. //இந்த சுப்பு தாத்தாவை ஒரு பொருட்டாக மதித்து//
    இப்படிச் சொல்லிட்டீங்களே தாத்தா. உங்களைப் போன்ற பெரியவர்களின் பார்வை பட, ஆசிகள் கிடைக்க, நான்(ங்கள்)தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். பாடலை வாசிப்பதை விட ஒலி வடிவில் கேட்கும் போதுதான் அதன் ஆகர்ஷணம் அதிகரிக்கிறது. எப்படிப்பட்ட பாடலானாலும், இதெல்லாம் எப்படிப் பாட முடியும் என்று தோன்றும் பாடல்களுக்குக் கூட, உடனுக்குடன் மெட்டமைத்துப் பாடி வலையேற்றி விடுகிறீர்கள். அதிலும் அழகழகான படங்களை இணைத்து, பல சமயங்களில் sound effects எல்லாம் கொடுத்து தூள் கிளப்பி விடுகிறீர்கள். தங்கள் பாடலை/கவிதையை சுப்பு தாத்தா பாட மாட்டாரா என்று பலரும் ஏக்கத்துடன் இருக்கிறார்கள் என்று அறிவேன். அப்படியிருக்க நீங்கள் தவறாமல் அம்மன் பாடல்களைப் பாடுவது அவள் அருளால்தான் என்பதில் ஐயமில்லை. அது மட்டுமின்றி சிறியவர்களாக இருந்தாலும் மனந்திறந்து பாராட்டி ஊக்குவிக்கிறீர்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு, நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் சந்தோஷத்தையும் கொடுக்க வேண்டும் என்று உங்கள் பிறந்த நாளன்று, மீண்டும் ஒரு முறை அன்னை பராசக்தியிடம் விண்ணப்பித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா. வலை வந்து பார்த்தவுடன் தங்கள் சுட்டி கண்டு ஓடி வந்தேன். அழகாக இனிமையாக படங்களுடன் தங்கள் குரலில் பாடி அசத்திட்டிங்க. எழுதும் போது ஏற்படாத சந்தோஷம் தாங்கள் பாடக் கேட்டதும் கிடைத்தது எனக்கு. ஒருவரை மனந்திறந்து பாராட்டுவதும் வாழ்த்துவது என்பது எல்லோருக்கும் அமைந்துவிடாது அதுவும் தங்களைப்போல இசையாகப் பாராட்ட யாருக்கும் வாய்க்காது தாங்கள் மேலும் நிறைந்த ஆரோக்யத்துடன் எங்கள் பாடல்களையெல்லாம் பாடியபடி பல்லாண்டுகள் வாழ வாழ்த்த வயதின்றி வேண்டுகிறேன். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்க ஐயா.

    குறிப்பு: பாடல் கேட்கும் போது என் புகைப்படத்திற்கு பதிலாக கோவை சரளாவின் புகைப்படம் இணைத்துவிட்டீர்கள் என நினைக்கிறேன். இருப்பினும் பரவாயில்லை. ஒரு தகவலுக்காக எழுதினேன்.

    ReplyDelete
  3. தோழி கவிநயா 2006 முதல் தொடர்ந்து எழுதுவது குறித்து மிகுந்த ஆச்சரியமடைந்தேன். அந்த பாடல்களை தாங்கள் தொடர்ந்து பாடி வருவது குறித்தும் மிகவும் மகிழ்ந்தேன். தோழிக்கும் தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete