Monday, June 15, 2015

கருப்பை வெள்ளையாக மாற்றும்

வணக்கம் தாத்தா பாட்டி நலம் தானே!
இம்முறை பாடல் இன்னும் அழகாக வந்திருக்கிறது தாத்தா எப்படி நான் நன்றி சொல்வேன் என்று தவிக்கிறது மனம். என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை மிக்க நன்றி உங்கள் கருணைக்கு. பைந்தமிழ் என்னில்ஓர் பாகமா


 இதைப் பார்க்கவில்லை என்று எண்ணுகிறேன். இதை சுப்பு தாத்தாவின் குரலில் கேட்க ஆசையாக உள்ளதாக ஊமைக்கனவுகள் viju வும் கேட்டிருந்தார்.

 எனக்கும் ஆசையாக உள்ளது.

 (click above.) கிளிக்குங்கள் மேலே )

நான் vacation ல் நிற்கிறேன் அமெரிக்காவில்

அதனாலேயே தாமதம். குறை நினைக்க வேண்டாம். மேலும் எல்லா நலன்களும் பெற்று இன்புற்று வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன். இப்படிக்கு இனியா

 இனியா

 sury Siva 7:53 AM (1 minute ago) to Iniya

 மேடம் இனியா அவர்களுக்கு, வணக்கம். 
உங்கள் கருத்துக்களை அவ்வப்போது பார்க்கும் காலையிலே நீங்கள் சென்னையிலோ அல்லது நம் தமிழகத்தின் எங்கோ ஒரு ஊரில் இருப்பதாகத்தான் நினைப்பேன். நீங்கள் தங்களை ஏழ் கடலுக்கும் அப்பால் இருப்பதாகக் குறிப்பிட்ட பொழுது நான் நினைத்தேன்.எண் திசைகளில் நம் தமிழ் மக்கள் வாழ்ந்திடினும் அவர்களை எங்கனம் தமது தமிழ் ஒரு வட்டத்தக்குள் இல்லை ஒரு கோட்டுக்குள் அதுவும் இல்லை ஒரு புள்ளிக்குள் நிறுத்துகிறது, அது மட்டும் அல்ல, அவர்கள் உள்ளங்களை அத்தமிழ் கவிதைகள் இசையின் நமது பாரம்பரிய இசையில் மயங்கச் செய்கிறது என்பதை .நினைந்து கண்கள் பனிக்க உருகி நிற்கிறேன். தமிழ் கவிதைகளை அடுத்த தலை முறைக்கு அதுவும் மரபுக் கவிதைகளை அடுத்த தலை முறைக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்புக்கள் பல தங்களைப் போன்றவர்களுக்கே அதிகம் உள்ளன. ஒரு இராமனுஜம், ஒரு பாரதிதாசன், மட்டும் இப்பணியில் பாடு படுகின்றனர். அவ்வப்போது அன்பர் சிவகுமாரன் பணியும் போற்றத்தக்கதே. ஆயினும் இவர்கள் மட்டும் போதாது. ஒரு தமிழினமே இதற்கான தொண்டைச் செய்யவேண்டும். நிற்க. தங்கள் கவிதைகள் எப்பொழுதுமே சொற்சுவை பெரிதும் கொண்டவை. தாங்கள் சாயி கவிதைகள் எழுதி அவற்றினை பாடியபொழுது நான் பெற்ற இன்பம் சொல்லிட இயலாது. இன்னும் எழுதுங்கள். உங்கள் பணி தொடர, சிறக்க , வான் அளாவி நின்று புகழ் பெற உங்களுடன் இறைவனின் ஆசிகள் என்றும் இருக்கும். நன்றி. சுப்பு தாத்தா. சொற்குற்றம், பொருட்குற்றம் பொறுத்திட வேண்டும்

. இவருக்காக நான் பாடிய பாடல் இதோ.  

துவக்கத்தில் பகுதாரி . முடிகையில் பாமினி 

இளைய ராஜா, இசை ஞானி அவர்களின் பாடல், 
பார்த்த விழி பார்த்த இடம்.பாடல் நினைவு இருக்கிறதா.
அற்புதமான பாடல். குணா என்னும் படம். 
கமல் சாரின் அற்புத நடிப்பு.

பாடலின் இறுதி பாக்கள். பாமினி @ கும்பினி எனும் ராகத்தில் உள்ளது. 

http://soundcloud.com/meenasury/iniyaamerica


அடுத்து, 

குழல் இன்னிசை பதிவு. 
பதிவர் யாதவன் நம்பி எனவும்
புதுவை வேலு எனவும் வளைய வரும் சொல் வள்ளல் பதிவாளர் அவர்களது 

வெண்ணிலவு கவிதை நான் தேஷ் ராகத்தில் பாடினேன்

No comments:

Post a Comment